பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் திரைப்படம் ‘எந்திரன்’.
இந்த படத்தில் ரஜினிகாந்த் சயின்டிஸ்டாகவும், சிட்டி ரோபோவாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார், ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன், சந்தானம், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
2010 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய சினிமாவில் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது.
விஞ்ஞானியால் மனித உணர்வுகளை கொண்டு உருவாக்கப்படும் சிட்டி ரோபோ மனிதகுலத்திற்கு ஆபத்தாக மாறநேரிடும் போது, அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
உலகெங்கிலும் பல மொழிகளில் வெளியான எந்திரன் திரைப்படம் பிரம்மாண்ட ஹிட் அடித்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் கேட்கப்படுகிறது.
பல விருதுகளை அள்ளிக்குவித்த எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக எந்திரன் (2.0) வெளியானது குறிப்பிடத்தக்கது.
எந்திரன் படத்தில் நாயகனாக நடிக்கவைக்க ஷங்கரின் முதல் தேர்வாக இருந்த ஹீரோ யார் தெரியுமா? இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
90 களிலேயே எந்திரன் படத்தை எடுக்க முடிவு செய்திருந்தாராம் இயக்குனர் ஷங்கர், 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எந்திரன் படத்தில் நடிக்க ஷங்கர் கமல் ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவையும் தேர்வு செய்தாராம்.
கமல் ஹாசன், ப்ரீத்தி ஜிந்தா இருவரையும் வைத்து படத்திற்கான போட்டோஷூட்டையும் எடுத்துவிட்டாராம் ஷங்கர், ஆனால் கமலின் கால்ஷீட் பிரச்னையால் படம் கைவிடப்பட்டது.
அதன் பின் மீண்டும் ஜூன் 2007 ஆம் ஆண்டு எந்திரன் படத்தில் ஹீரோவாக நடிக்க ஷாருக் கானையும் ஹீரோயினாக ப்ரியங்காசோப்ராவையும் நடிக்க வைக்க தேர்வு செய்தாராம்.
ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஷாருக்கானுக்கு ஸ்க்ரிபிட்டின் மேல் இருந்த சில முரண்பாடுகளால் படப்பிடிப்பு ரத்தானதாம்.
அதன் பின் தான் எந்திரன் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரையும் தேர்வு செய்து படத்தை இயக்கினாராம் ஷங்கர். தற்போது ப்ரீத்தி ஜிந்தா மற்றும் கமல்ஹாசனை வைத்து எந்திரன் படத்திற்கு ஷங்கர் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.