ஒரு தடவ போட்ட டிரெஸ்ஸ திரும்ப போடுவதில்லை... நடிகை சினேகாவுக்கு இப்படி ஒரு விநோத பழக்கம் இருக்கா- காரணம் என்ன?
நடிகை சினேகா தான் ஒரு முறை அணிந்த ஆடைகளை மறுபடி அணிவதில்லை என பேட்டி ஒன்றில் கூறி இருக்கும் நிலையில், அதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம்.
Sneha
மாதவன் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு திரைக்கு வந்த என்னவளே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சினேகா. இதையடுத்து லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் நடிகர் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்து இவர், அப்படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழி பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், கமல், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.
Sneha Prasanna
சினேகாவின் ஸ்பெஷலே சிரிப்பு தான், அதனால் ரசிகர்கள் அவரை செல்லமாக புன்னகை அரசி என அழைத்து வருகின்றனர். நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது அவர்களிடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2012-ம் ஆண்டு பிரசன்னாவை கரம்பிடித்தார் சினேகா. இந்த ஜோடிக்கு விஹான் என்கிற மகனும், ஆத்யந்தா என்கிற மகளும் உள்ளனர்.
Actress Sneha Outfits
திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சினேகா, தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சினேகா. இதுதவிர தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். அண்மையில் சென்னை தி நகரில் பிரம்மாண்ட துணிக்கடை ஒன்றை தொடங்கினார் சினேகா. அந்த கடைக்கு சினேகாலயா என பெயரிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பாரதிராஜாவின் இந்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் அனிதா விஜயகுமார் நடிக்க வேண்டியதா? நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே!
Sneha Never Repeat her Outfits
இந்நிலையில், நடிகை சினேகா தான் ஒரு முறை அணிந்த ஆடைகளை மறுபடி அணிவதில்லை என பழைய பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் அதற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார். அதன்படி, நான் ஒருவாட்டி போட்ட டிரெஸ் அடுத்த முறை ரிப்பீட் பண்ண மாட்டேன். ஏன்னா, ஒருமுறை நான் ஒரே டிரெஸ்ஸை அணிந்து வந்ததை பார்த்து, சினேகா கிட்ட வேற டிரெஸ்ஸே இல்லையானு நியூஸ் பேப்பர்ல எழுதிருந்தாங்க.
Sneha says about dress
அதனால அன்றில் இருந்து, ஒருவாட்டி யூஸ் பண்ணிய ஆடைகளை மறுமுறை போடுவதில்லை. அந்த ஆடைகளை எல்லாம் என்னுடைய தோழிகளுக்கோ அல்லது தேவைப்படுபவர்களுக்கோ கொடுத்துவிடுவேன். நான் எப்போதும் ஆடையில் தனி கவனம் செலுத்துவேன். ஆடைகளை ரிப்பீட் பண்ணுவதில்லை என்பதால் என்னுடைய கப்போர்டு பெரிதாகிக் கொண்டே செல்கிறது என சினேகா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கறுப்பு பணத்தை வெள்ளை பணமா மாத்துறேனா? சமூக வலைதளத்தில் பரவும் கருத்துக்கு பாலா முற்றுப்புள்ளி