People demanding for Trichy to chennai new intercity train instead of pallavan express: திருச்சி-முதல் சென்னைக்கு புதிய இன்டர்சிட்டி ரயில்கள் இயக்கப்படுமா? பல்லவன் ரயிலில் ரிசர்வ் கோச்சில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!

திருச்சி-சென்னைக்கு புதிய இன்டர்சிட்டி ரயில்கள் இயக்கப்படுமா? பல்லவன் எக்ஸ்பிரஸ்சில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!

Authored byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 20 May 2024, 12:19 pm
Subscribe

திருச்சி-முதல் சென்னைக்கு புதிய இன்டர்சிட்டி ரயில்கள் இயக்கப்படுமா? பல்லவன் ரயிலில் ரிசர்வ் கோச்சில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

people demanding for trichy to chennai new intercity train instead of pallavan express
திருச்சி-சென்னைக்கு புதிய இன்டர்சிட்டி ரயில்கள் இயக்கப்படுமா? பல்லவன் எக்ஸ்பிரஸ்சில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரிசர்வ் கோச்சில் முன்பதிவு செய்யாத பயணிகளும் பயணம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் பரிசோதகர்

இது பல்வேறு ரயில்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிடிஆர் இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதேபோல் காரைக்குடி-சென்னை வரை இயக்கப்படும் பல்லவன் ரயிலிலும் நடந்து வருகிறது. இதனால் பயணிகள் அனைவரும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

​கடும் அவதி

​கடும் அவதி

இந்த பல்லவன் ரயிலில் ரிசர்வ் கோச்சுகளில் அதிகளவிலான மக்கள் கூட்டம் பயணம் செய்வதால் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் கழிப்பறைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலானது முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

ரயில் கட்டணம் குறைவு

ரயில் கட்டணம் குறைவு

இந்த ரயிலானது திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மக்கள் அனைவரும் தனியார் பஸ்கள், பேருந்துகளைவிட பல்லவன் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்த ரயிலில் தட்கல் கட்டணமாக 178 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதுவே பேருந்து கட்டணமாக குறைந்தது 264 ரூபாய் முதல் 612 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

​64 வயது பயணி

​64 வயது பயணி

ரிசர்வ் கோச்சில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்தது தொடர்பாக 64 வயது பயணி ஒருவர் கூறுகையில், கூட்ட நெரிசல்தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்னால் ரயிலில் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. என்னால் கழிப்பறையை கூட நெருங்க முடியவில்லை, என்றார்.

புதிய இன்டர்சிட்டி ரயில்கள் ரயில்

புதிய இன்டர்சிட்டி ரயில்கள் ரயில்

டிக்கெட் பரிசோதகர்களால் கூட்ட அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லவே முடியாத நிலைமை உருவாகி இருப்பதால் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு திருச்சி-சென்னை இடையே புதிய இன்டர்சிட்டி ரயில்கள் ரயிலை இயக்குவது தான். பொதுவாக சுற்றுலாப்பயணிகள், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் மேல்மருவத்தூர் கோவிலுக்கு அதிகளவில் வருகின்றனர். அவர்களுக்கு இதேபோல் புதிய ரயிலை விடப்பட்டால் உபயோகமாக இருக்கும் என்று பயணி ஒருவர் கூறினார்.

​விரைவில் இதற்கு தீர்வு

​விரைவில் இதற்கு தீர்வு

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தை நாங்களும் பார்த்துக்கொண்டு வருகிறோம். மக்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டாலும் இதற்கு ஒரு முடிவு கிடைக்கப்போவதில்லை. சம்மர் சீசன் காரணத்தினால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். என்றார்.


சு. கணபதி சுப்பிரமணியன்
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்