உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. அதில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் நிர்ணயிக்கப்பட்டிருந்த 1.99 மீட்டர் உயரத்தை தாண்டி இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான குறைந்த தூர(200 மீட்டர்) ஓட்டப்போட்டியில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30.49 விநாடிகளில் கடந்து மூன்றாமிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.